தமிழ் திரைப்பட இயக்குநரும், குணச்சித்திர நடிகருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார்.
ராஜா ராஜா தான், இராவணன், சுயம்வரம், ஆயிரம் பூக்கள் மலரட்டும், வாழ்க ஜனநாயகம், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு போன்ற திரைப்படங்களை இயக்கியவரும், விசாரணை, காக்கி சட்டை, ஏஜெண்ட் கண்ணாயிரம், அறம், மாரி-2 போன்ற பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவருமாகிய ஈ. ராமதாஸ் மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 66.
விழுப்புரத்தை சேர்ந்த இவர் எழுத்தாளராக சினிமாத்துறையில் சேர்ந்து, இயக்குநராக வெற்றித்திரைப்படங்களை தந்தவர், பின்னாளில் குணச்சித்திர நடிகராக பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். குறிப்பாக, போலீஸ் கதாப்பாத்திரத்தில் இவர் அதிகளவு நடித்திருந்தார்.
இவரின் மறைவையொட்டி, திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஈ. ராமதாஸின் இறுதி சடங்குகள் இன்று காலை அவரது இல்லத்தி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் இருந்து மும்பைக்கு பறந்த பிரியாணி; குடிபோதையில் ஆர்டர் போட்ட பெண்!