Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்கார்த்தி சிதம்பரத்தை கண்டுகொள்ளாமல் சென்றாரா ராகுல் காந்தி? வைரல் காணொளி

    கார்த்தி சிதம்பரத்தை கண்டுகொள்ளாமல் சென்றாரா ராகுல் காந்தி? வைரல் காணொளி

    நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த ராகுல்காந்தி சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தை கண்டுகொள்ளாமல் நடந்த சென்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவரை மறைமுகமாக தாக்கியதாகவும், பாஜக சார்பில் குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

    இதைத்தொடர்ந்து, கேரள மாநிலம், வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது. 

    ராகுல் காந்தியின் இந்த தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். 

    இந்நிலையில், இன்று ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு சென்றார். அப்போது ராகுல் காந்தி வெளியே நின்று இருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வணக்கம் கூறி கைக்கொடுத்தார். இருப்பினும் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தை பார்த்தும் ராகுல் காந்தி கைக் கொடுக்காமல் சென்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    மாவீரன் படத்தின் அப்டேட்.. ‘டாட்டா’ காட்டும் சிவகார்த்திகேயன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....