தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்களது விவாகரத்து முடிவை ரத்து செய்யப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடந்த ஜனவரி 17 ஆம் தேதி எவரும் எதிர்ப்பார்க்காத வகையில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் தாங்கள் விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர். இருவரின் இந்த அறிவிப்பானது தமிழக திரையுலகிலும், திரையுலக ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த அதிர்வலைகள் ஒரு வார காலத்திற்கும் மேல் வீரியம் குறையாமல் தமிழக திரையுலகில் அடித்துக்கொண்டிருந்தது.
இதையும் படிங்க:பாலிவுட்டுடன் கோலிவுட், டோலிவுட் இணைந்தால் 4,000 கோடி வசூலாகும் – புதிய ரூட்டில் சல்மான்கான்
படிப்படியாக அதிர்வலைகளின் வீரியம் குறைய, நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தங்களின் தனிப்பட்ட பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினர். இருப்பினும், அவ்வபோது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரைப் பற்றிய கருத்துகள் சமூகவலைதளங்களில் ஒலித்துக்கொண்டே இருந்தன.
இந்நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து முடிவை ரத்து செய்து மீண்டும் பந்தத்தில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், ரஜினிகாந்த் உள்பட இரு குடும்பத்தாரும் இவர்கள் இருவரையும் இணைத்து வைக்க முயற்சி மேற்கொண்டதன் பலனே இது என்றும் தகவல் வெளிவந்துள்ளது. இத்தகவல் எந்த அளவிற்கு உண்மை என்கிற தரவு இதுவரை தெரியவில்லை. எது எப்படியாக இருப்பினும், தற்போது சமூகவலைதளங்களில் பலரும் இருவரும் இணைய வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.