மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக சதுரகிரி மலையில் ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இக்கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ளது. பிரதி தமிழ் மாதம்தோறும் அமாவாசை, பௌர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் சிறப்பு பூஜைகள் இங்கு நடைபெறும்.
பூஜைக்கு இரண்டு நாள்கள் முதல் நான்கு நாள்கள் வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படும். குறிப்பாக, ஆடி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட பிரதான அமாவாசை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், இங்கு வந்து மலையேறி சுந்தரமகாலிங்க சாமியை தரிசனம் செய்வர்.
சுந்தரமகாலிங்க சாமியை தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்நிலையில், நேற்று கார்த்திகை பிரதோஷம் என்பதால் பக்தர்கள் மலையேறி செல்ல வனத்துறை அனுமதி அளித்திருந்த நிலையில், மலையில் சாரல் மழை பெய்ததன் காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை வாயிலின் முன்பு நின்று தரிசனம் செய்துவிட்டு திரும்பினர். மேலும் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு 18 வகை பொருள்களால் சிறப்பு ஆராதணை நடைபெற்றது.
இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை