இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (ஜூலை 27) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேலும் புதிதாக 18,313 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,39,38,764 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,26,167 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,742 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,32,67,571 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,45,026 ஆக உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 202.79 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குரங்கம்மை: விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்