Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இசையமைப்பாளர் டி.இமான் இரண்டாவது திருமணம்; முதல் மனைவி கேட்ட கேள்வி?

    இசையமைப்பாளர் டி.இமான் இரண்டாவது திருமணம்; முதல் மனைவி கேட்ட கேள்வி?

    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். தமிழில் மைனா மற்றும் கும்கி படங்களின் மூலம் இவர் பெரும் பிரபலமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார், டி இமான். இவரது 50வது படமாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் அமைந்தது.

    இந்தப் படத்தின் பாடல்களும் செம ஹிட்டானது. இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் இமான். கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்திற்கு இசையமைத்திருந்தார் டி இமான். இந்தப் படத்தின் பாடல்களும் செம ஹிட்டானது.

    தற்போது கேப்டன், யுத்தசத்தம், பொய்க்கால் குதிரை, மை டியர் பூதம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஏராளமான பாடல்களையும் பாடியுள்ளார் டி. இமான்.

    கடந்த வருட இறுதியில், இவர் அவரது மனைவியை விவாகரத்து செய்ததாக அறிவித்தார், டி இமான். கம்ப்யூட்டர் இன்ஜினியரான மோனிக்கா ரிச்சர்ட்டை கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களின் 13 ஆண்டு திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே இருவரும் விவாகரத்து செய்துவிட்டதாக தெரிகிறது. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் இமான் சமீபத்தில் அமலி உபால்டு என்பவரை மறுமணம் செய்துள்ளார். அமலியின் மகள் நேத்ராவை இனி தனது மூன்றாவது மகளாக ஏற்றுக்கொள்வதாகவும் தனது மகள்கள் வெரோனிகா மற்றும் பிளெசிகாவை மிகவும் மிஸ் செய்வதாகவும் அவர் தெரிவிததிருந்தார்.

    இந்நிலையில் இமானின் முன்னாள் மனைவி மோனிக்கா ரிச்சர்டு அவரை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “டியர் டி. இமான், இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துகள். 12 ஆண்டுகள் உங்களுடன் சேர்ந்து வாழ்ந்த ஒருவரை இவ்வளவு சீக்கிரம் மாற்றிவிட முடியும் என்றால் உங்களை போன்ற நபருடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள் என நினைக்கிறேன்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களின் சொந்த பிள்ளைகளையே நீங்கள் பார்க்கவும் இல்லை, கவனிக்கவும் இல்லை. ஆனால் அவர்களுக்கு பதிலும் ஒருவரை கண்டுபிடித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

    உங்கள் அப்பாவிடம் இருந்து என் பிள்ளைகளை நான் பாதுகாப்பேன். தேவைப்பட்டால் அந்த புது குழந்தையையும் நான் பாதுகாப்பேன். திருமண வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

    பேரறிவாளனின் விடுதலையை எதிர்த்து வித்தியாசமாக போராடப்போகும் காங்கிரஸ் கட்சியினர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....