Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இயக்குநர் மீது பாய்ந்த பாலியல் குற்றச்சாட்டு; பிக்பாஸை விட்டு வெளியேறுவாரா?

    இயக்குநர் மீது பாய்ந்த பாலியல் குற்றச்சாட்டு; பிக்பாஸை விட்டு வெளியேறுவாரா?

    பிரபல பாலிவுட் இயக்குநர் மீது மீண்டும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பாலிவுட்டில் பிரபல இயக்குநராக இருப்பவர் இயக்குநர் சஜித்கான். இவர் தற்போது பாலிவுட்டில் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளார். இந்நிலையில், இவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றும்படி தொடர்ந்து சமூகவலைதளங்களிலும், மகளிர் அமைப்புகளின் சார்பாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

    இதற்கு காரணம் என்னவெனில், மீ டூ (me too) புகாரின்போது 10 மேற்பட்டப் பெண்கள் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும், சமீபத்தில் கூட டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு சர்ஜித்கானை பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றும்படி கடிதம் எழுதியுள்ளார். 

    இந்நிலையில், தற்போது பேஜ்புரி நடிகை ராணி சாட்டர்ஜி சஜித்கான் படப்பிடிப்பின் போது தன்னை பாலியல் ரீதியாக தொடர்பிலிருக்கும்படி வலியுறுத்தினார் என தெரிவித்துள்ளார்.  இதனால், ஹிந்தி பிக்பாஸ் சீசன் 16-இல் கலந்துகொண்டுள்ள இயக்குநர் சஜித்கான் இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இவரை அத்தொடரிலிருந்து வெளியேற்ற வேண்டும் என பலர் கூறி வருகின்றனர்.

    இதையும் படிங்க: இசைப்புயலோடு மாஸ்டர் பிளாஸ்டர் எடுத்த வைரல் புகைப்படங்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....