புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,747 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (செப்டம்பர் 17) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 5,747 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,45,28,524 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,848 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 29 பேர் உயிரிழந்தனர். இதனால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,302 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 5,618 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,39,53,374 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 216.41 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த 21 பேரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய மருத்துவர் ராமதாசு