Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇன்றைய கொரோனா நிலவரம் என்ன?

    இன்றைய கொரோனா நிலவரம் என்ன?

    புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,439 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாட்டில் நேற்று புதிதாக 5,591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,439 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (ஆகஸ்ட் 30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 

    செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 5,439 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4.44 கோடியாக ஆக அதிகரித்துள்ளது. 

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 65,732 ஆக குறைந்துள்ளது.

    இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4.38 கோடியாக ஆக அதிகரித்துள்ளது. 

    நாட்டின் மொத்த பாதிப்பில் உயிரிழப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது. கொரோனா பாதித்தவர்கள் விகிதம் 0.15 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 98.66 சதவீதமாகவும் உள்ளது. 

    நாடு முழுவதும் இதுவரை 212.71 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 

    இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    சாலை விபத்துகளில் சென்னை முதலிடம்; தமிழகத்துக்கு எத்தனையாவது இடம்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....