கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாகக் கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 29) மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாகப் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இன்று (ஆகஸ்ட் 30) காலை 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவிகள் அப்போராட்டத்தில் தரமற்ற உணவு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இத்தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பேரூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ பாண்டியன் மற்றும் காவல்துறையினர் மாணவிகளுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். மேலும்,
பல்கலைக்கழக அதிகாரிகளும் மாணவிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
கோவை பாரதியார் பல்கலைகழக விடுதியில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை எனவும், உணவில் புழு இருப்பதாகவும் கூறி மாணவிகள் சாப்பாட்டு தட்டுடன் கல்லூரி விடுதி் வாயில் முன்பாக போராட்டம். #கோவை #விடியலஅரசு pic.twitter.com/Z4DbpM6JYB
— AIADMK IT WING KOVAI URBAN District (@ITWingKovai) August 30, 2022
மருத்துவமனை வளாகத்தில் பாம்பு; அலறியடித்து ஓடிய பொதுமக்கள்