Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று ....

    4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று ….

    புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாட்டில் நேற்றைய கொரோனா தொற்று பாதிப்பு 3,947 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் குறைந்து 3,805 ஆக பதிவாகியுள்ளது.

    இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (அக்டோபர் 01 ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 3,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட குறைவாகும் .

    இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,45,91,112 ஆக அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38,293 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்தனர். இதனால், இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,655 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,40,24,164 பேர் குணமடைந்துள்ளனர்.

    காலை 9 மணி வரை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் ,புதிதாக 16,29,137 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது .இதனால் நாடு முழுவதும் இதுவரை 2,18,68,45,847 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

    இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் சதவிகிதம் 98.73 என்ற அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது .

    இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: இந்தியாவில் 2050-க்குள் பெட்ரோல், டீசல் பயன்பாடு முழுமையாக நிறுத்த முடியும் – அமைச்சர் பேச்சு!

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....