Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுடியரசு தினத்தில் சதி திட்டமா? தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர்

    குடியரசு தினத்தில் சதி திட்டமா? தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர்

    ஜம்மு காஷ்மீரில் குடியரசு தினத்தன்று சதிச் செயலில் ஈடுபட இருந்த இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

    குடியரசு தினத்தை முன்னிட்டு நாடெங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் புட்கம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து
    சோதனைச் சாவடி அமைத்து நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்தச் சோதனையின் போது, பல்வேறு வாகனங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. இந்நிலையில், சோதனையின்போது அந்த வழியாக வந்த வாகனத்தில் இருந்தவர்கள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு படை வீரர்களின் பதில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இருவரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பினர். புட்கமில் நடைபெற்ற என்கவுண்டரில் இருந்து ஏற்கெனவே தப்பித்த இவர்கள் இருவரும் குடியரசு தினத்தன்று சதித் திட்டத்தில் ஈடுபட இருந்ததாக தெரிவித்தனர்.

    மேலும், இவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அஜித்குமாரின் திரைப்படத்தில் இந்த நடிகையா? – வெளிவந்த அப்டேட்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....