Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகாதலிக்காக மனைவியை கொல்ல முயன்ற கணவன்; கண்டுபிடித்த காவல்துறை

    காதலிக்காக மனைவியை கொல்ல முயன்ற கணவன்; கண்டுபிடித்த காவல்துறை

    கோவையில் காதலிக்காக மனைவியை கொல்ல முயன்ற கணவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவருக்கு கீர்த்தனா என்ற மனைவியும் சாய் சர்வேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இவர் தனது குடும்பத்தினருடன் செந்தாம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். ஸ்ரீதரன் தனியார் மருத்துவமனை கேட்டரிங்கில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். 

    இந்நிலையில், இவருக்கும் அங்கு வேலைபார்க்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நெருக்கமான பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதை அறிந்த கீர்த்தனா கணவரை கண்டித்துள்ளார். மேலும் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஆத்திரமடைந்த ஸ்ரீதரன், கீர்த்தனாவை தாக்கியதாக சொல்லப்படுகிறது. 

    இதையடுத்து, தனது கணவர் உள்பட 3 பேர் தனக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றதாக கீர்த்தனா அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

    இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், அப்பெண்ணின் கணவர் ஸ்ரீதரன், அவருடன் பழகிய ரம்யா மற்றும் இவர்களுக்கு உதவிய நண்பர் பழனி ஆகிய மூன்று பேரும் விஷ ஊசி செலுத்தி கொள்ள முயன்றது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த ரம்யாவும் பழனியும் தலைமறைவாகி இருந்த நிலையில் காவல்துறையினர் அவர்களை தேடி வந்தனர். 

    இந்நிலையில், கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜே.புதூர் பகுதியில் இருப்பதை அறிந்த காவல்துறையினர், ரம்யா மற்றும் பழனி இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    இந்தியாவில் இவ்வளவு வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கமா? – வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....