Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் கைக்குழந்தை திடீரென உயிரிழப்பு : சோகத்தில் கால்பந்து உலகம்!

    பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் கைக்குழந்தை திடீரென உயிரிழப்பு : சோகத்தில் கால்பந்து உலகம்!

    மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் போர்ச்சுக்கல் கால்பந்து அணிகளின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னுடைய கைக்குழந்தை இறந்த சோகச்செய்தியை அவருடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இந்த துயரத்தை அவர் தன்னுடைய இணையார் ஜார்ஜியானா ரோட்ரிக்ஸ் உடன் பகிர்ந்துகொள்வதாகவும், அதற்கான தனிமையை வழங்குமாறும் அனைவரிடமும் கேட்டு கொண்டுள்ளார் ரொனால்டோ. 

    இதற்கு முன்பாகவே கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அவருடைய இணையார் ஜார்ஜியானா ரோட்ரிக்ஸும் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க போவதாக தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து இருந்தனர். அந்த இரட்டை குழைந்தைகளில் ஒன்று ஆண் மற்றும் மற்றொன்று பெண் குழந்தை ஆகும். அவற்றில் ஆண் குழந்தை தான் தற்பொழுது உயிரிழந்து விட்டதாக ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 

    மான்செஸ்டர் யுனைடெட் அணியைச் சேர்ந்த வீரர் ஒருவர் இந்த துயர சம்பவத்தில் இருந்து மீள, ரொனால்டோவுக்கு அவரது புதிய மகளின் பிறப்பு மட்டுமே உறுதுணையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.  கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஏற்கனவே ரொனால்டோ ஜுனியர் மற்றும் மேட்டியோ என இரண்டு ஆண் குழந்தைகளும், ஈவா மற்றும் அலானா என்று இரண்டு பெண்குழந்தைகளும் உள்ளனர். 

    மிகவும் ஆழ்ந்த வருத்தத்துடன் என்னுடைய கைக்குழந்தை இறந்த செய்தியை அறிவிக்கிறேன். இதனை விட துயரசம்பவமாக ஒரு பெற்றோருக்கு வேறு எதுவும் இருக்க முடியாது என்று தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

    எங்களுடைய பெண் குழந்தையின் பிறப்பு மட்டுமே தற்பொழுது வாழ்க்கைக்கான நம்பிக்கையை கொடுத்துள்ளது. அவளின் பிறப்பு புது நம்பிக்கையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. மிகவும் கவனத்துடன் பார்த்துக்கொண்டு இறுதி வரை போராடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த துயரத்தில் இருந்து மீள எங்களுக்கு தனிமை தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 

    தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் பிரிமியர் லீக் போட்டியில் 15 கோல்களை அடித்து முன்னணி கோல் ஸ்கோராக இருந்து வருகிறார். சமீபத்தில் தான் தன்னுடைய 60வது ஹாட்ரிக் கோலை அடித்து சாதனை படைத்து இருந்தார். 37-வயது ஆகும் ரொனால்டோ இதுவரை 807 கோல்களை அடித்து, உலக கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்தவராக முதலிடத்தில் உள்ளார். 

    ரொனால்டோ அங்கம் வகிக்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணி தன்னுடைய அடுத்த ஆட்டத்தில் லிவர்பூல் அணியை வருகின்ற வியாழக்கிழமை எதிர்கொள்கிறது. தற்பொழுது ரொனால்டோவுக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்பின் காரணமாக அவர் அந்தபோட்டியில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....