ஆஸ்கர் வென்ற இந்திய திரைப்படங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
திரையுலகின் மிக முக்கிய விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் விருது. இந்த விருது வழங்கும் விழாவானது இன்று காலை அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் தொடங்கியது.
இதில் சிறந்த பாடல் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்த இந்தியாவின் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் விருதை வென்றுள்ளது. இந்த விருதை இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணியும் (மரகதமணி), பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.
மேலும், சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான விருதை இந்தியாவின் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் வென்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு படத்தின் குழுவினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியத் தயாரிப்புக்கு முதன்முதலில் ஆஸ்கார் விருதை இரண்டு பெண்கள் கொண்டு வந்ததைவிட சிறந்த செய்தி இல்லை. தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படத்தின் உருவாக்கம் மற்றும் நகரும் கதைக்கு அனைத்து பாராட்டுகளும் தகுதியானது. ஆஸ்கரை வென்ற கார்த்திகி கோன்சால்வ்ஸ், குனீத் மோங் ஆகியோருக்கு வாழ்த்துகள் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல், “இந்தியா மற்றும் ஆசிய அளவில் முதல்முறையாக ஆஸ்கர் விருதை பெற்று நாட்டு நாட்டு பாடல் வரலாறு படைத்துள்ளது. இசையமைப்பாளர் கீரவாணி, சந்திரபோஸ், ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு வாழ்த்துகள்.” என்று டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கும் இந்திய ரசிகர்கள்!