உங்கள் துறையில் முதல்வர் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் இன்று காவலர்களின் குறைகளை கேட்டறிந்து , அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் .
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் , தேர்தல் பிரச்சாரத்தின் போது மாவட்டங்கள் தோறும் பொது மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து , அப்பிரச்சனைகள்தொடர்பான மனுக்களைப் பெற்று, அந்த மனுக்களின் மீது ,திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனற வாக்குறுதியை அளித்திருந்தார்.
ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த அந்த வாக்குறுதியின் படி , அதற்க்கென தனி ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து ,பொதுமக்கள் கொடுக்கும் அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
அதன் அடிப்படையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக சென்னை காமராஜர் சாலையில் உள்ள காவல்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு இன்று சென்றார் .அங்கு வளாக முகப்பில் மகிழம் பூ மரக்கன்றை நட்டு வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் , அங்குள்ள காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார் .
இதனை தொடர்ந்து “உங்கள் துறையில் முதல்வர்” திட்டத்தின் கீழ் காவலர்கள் சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டது .அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ,அதற்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் . இந்த நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: திமுகவின் அராஜகமும் ஆளும் கட்சி நடத்தும் அத்துமீறலும்.. பாஜக அறவழி போராட்டம் அறிவிப்பு