சென்னையில் 5 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையின் போக்குவரத்துகளில் முக்கியமான அம்சமாக பார்க்கப்படுவது, இரயில் பயணம். தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இயல்பாக ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். பலர் ரயிலின் நேரத்தை வைத்துதான் தங்களின் அலுவல்களை திட்டமிடுகின்றனர்.
இந்நிலையில், டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் சென்னை – தாம்பரம் செல்லக்கூடிய 5 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட உள்ள ரயில்கள்:
- இரவு 11.20-க்கு புறப்படும் சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில் டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
- இரவு 11.40-க்கு புறப்படும் சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில் டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
- இரவு 11.59-க்கு புறப்படும் சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில் டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
- இரவு 9.35-க்கு புறப்படும் தாம்பரம் – சென்னை கடற்கரை ரயில் டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
- இரவு 10.45-க்கு புறப்படும் தாம்பரம் – சென்னை கடற்கரை ரயில் டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
6 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ரயான் திட்டம்!