Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபார்த்துட்டு போங்க.. சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்

    பார்த்துட்டு போங்க.. சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்

    சென்னை: சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

    இது தொடர்பாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை (புதன்கிழமை) முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது. 

    தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 9.35, 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 23, 24-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது. 

    தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று முதல் 24-ந்தேதி வரை முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது. 

    கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 9.30, 10 மற்றும் 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று மற்றும் நாளை முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது. 

    கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.20, 11.40, 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 23 மற்றும் 24-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.

    இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    நிலுவை தொகை செலுத்தாத 125 கடைகளுக்கு சீல்! சென்னை மாநகராட்சி அதிரடி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....