சென்னை: சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை (புதன்கிழமை) முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.
தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 9.35, 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 23, 24-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.
தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று முதல் 24-ந்தேதி வரை முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.
கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 9.30, 10 மற்றும் 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று மற்றும் நாளை முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.
கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.20, 11.40, 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 23 மற்றும் 24-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவை தொகை செலுத்தாத 125 கடைகளுக்கு சீல்! சென்னை மாநகராட்சி அதிரடி