சென்னை மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் 125 கடைகள் இயங்கியதால் அவற்றுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னையில் 15 மாநகராட்சி மண்டலங்களிலும் நிலுவையில் இருக்கும் தொழில் மற்றும் சொத்து வரியை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயம், தொழில் வரியை செலுத்தாத கடையின் உரிமையாளர்களுக்கு இது தொடர்பாக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. நோட்டீஸ் அனுப்பியும் கடை உரிமையாளர்கள் நிலுவை தொகையை செலுத்தாத காரணத்தினால், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, சென்னை திருவல்லிக்கேணி, ஜி.பி.சாலை, பாரதிசாலை, செல்லப்பிள்ளையார் கோயில் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் இருக்கும் 125 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தொழில் வரி செலுத்தாமல் மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் கடைகள் இயங்கியதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு தான் கொண்டாட்டம் என்பது தான் இங்கு நடக்கிறது! தமிழிசை சவுந்தர்ராஜன்