தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
இதுகுறித்து இன்று (அக்டோபர் 22 ) நண்பகல் 1.40 மணிக்கு சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையின் படி:
நேற்று அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று காலை (அக் 22) 8.30 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில், போர்ட் பிளேர்க்கு ,மேற்கு – வடமேற்கு திசையில் 110 கிலோமீட்டர் தொலைவிலும், சாகர் தீவுக்கு தெற்கு தென் கிழக்கு திசையில் 1460 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது .
இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 23-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் .
பின்னர் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 24-ஆம் தேதி காலை புயலாக வலுபெறக்கூடும். அதன் பின்னர் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 25 ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு – சந்திவிப் இடையில் கரையை கடக்கும்.
இதனால் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் நீலகிரி ,ஈரோடு ,திருவள்ளூர் ,ராணிப்பேட்டை ,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது .
சென்னையை பொறுத்துவரை :
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் .
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் .
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை :
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது .
அதிகபட்சமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி,விருதுநகர் மாவட்டம் சாத்தூர் , ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ,தலா 6 செ.மீ., மழையும், தூத்துக்குடி மாவட்டம் குணசேகரப்பட்டினம் ,மதுரை விரகனூர் அணை ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ., மழையும் , பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
22.10.2022: லட்சத் தீவு, மாலத் தீவு பகுதிகள் ,குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோர பகுதிகள் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் ,இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் .
கேரளா கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் ,இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் .
மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .