நடிகர் பார்த்திபன் நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படத்தை வெளியிட தடை கோரி வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள திரைப்படம்தான், இரவின் நிழல். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இத்திரைப்படம் வருகிற 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘இரவின் நிழல்’ என்ற திரைப்படத்தை தனது அகிரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பதாக கூறி, நவீன் எண்டர்பிரைசஸ் பாஸ்கர ராவிடம் படப்பிடிப்புக்கு தேவையான ஒளிப்பதிவு சாதனங்களை குறைந்த வாடகையில் நடிகர் பார்த்திபன் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இரவின் நிழல் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி பாஸ்கர் ராவ் என்பவர் வணிக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
வணிக நீதிமன்றத்தில் பாஸ்கர் ராவ் தொடுத்துள்ள மனுவில், ஒளிப்பதிவு சாதனங்களுக்கான 25 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தாமல் திரைப்பட வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த வணிக நீதிமன்றம், இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் பார்த்திபன் மற்றும் அவரது மகள் கீர்த்தனா ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
கல்கியின் பொன்னியின் செல்வன்- சமஸின் கருத்து மீது விமர்சனம்