Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சை மருந்துகள் தயார்

    அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சை மருந்துகள் தயார்

    தீபாவளி தினத்தன்று மிகவும் பாதுகாப்பாக திறந்தவெளியில் பட்டாசு வெடிக்கவேண்டும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குனர் மருத்துவர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். 

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குனர் மருத்துவர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- 

    தீபாவளி தினத்தன்று மிகவும் பாதுகாப்பாக திறந்தவெளியில் பட்டாசு வெடிக்கவேண்டும். பட்டாசுகளை தீப்பற்றும் பொருட்களுக்கு அருகில் வைக்கக்கூடாது. 

    எளிதில் தீப்பற்றாத பருத்தி ஆடைகளை அணியலாம். பிள்ளைகள் பட்டாசு வெடிக்கும்போது பெற்றோர் அவர்கள் மீது கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும். 

    பட்டாசுகளை மிக அருகே சென்று வெடிக்க வேண்டாம். பட்டாசு வெடிக்கும்போது முன்னெச்சரிக்கையாக அருகிலேயே வாளியில் நீரை வைத்திருப்பது நல்லது. 

    பட்டாசு வெடித்த பின்னர் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். பட்டாசுகளை தூக்கிப்போட்டு வெடிக்கச் செய்யும் செயலில் ஈடுபடக்கூடாது. 

    ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி உள்ளடங்கிய அரசு மருத்துவமனைகள் வரை அனைத்து மருத்துவமனைகளிலும் தீக்காய சிகிச்சைக்கான மருந்துகள், குளுக்கோஸ் பாட்டில்கள் உள்பட தேவையான மருந்துப்பொருட்கள் தயார்நிலையில் இருக்கவேண்டும். 

    தேவையான ரத்தம் இருப்பில் உள்ளவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட அறுவைசிகிச்சைகளுக்கான மருத்துவர்களும் தயாராக இருக்கவேண்டும். 

    விரும்பத்தகாத எந்த நிகழ்வுகள் நடந்தாலும் உடனடியாக அதுகுறித்து dphepi@nic.in என்ற இணையதள முகவரியில் மாநில அவரசர கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் அனுப்பவேண்டும். அதை சுகாதாரத்துறை துணை-இணை இயக்குனர்கள், அரசு மருத்துவமனை ‘டீன்’கள் ஆகியோர் கண்காணிக்க வேண்டும். 

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: திரையரங்கில் அமர்ந்து யாரும் படம் பார்க்க போவதில்லை…வாரிசு படம் குறித்து டான்ஸ் மாஸ்டர் ஜானி வெளியிட்ட பரபரப்பு ட்விட் !

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....