சென்னை அன்பு இல்லத்தில் இருந்து சிறுவர்கள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் டான் போஸ்கோ அன்பு இல்லம் இயங்கி வருகிறது. இந்த இல்லத்தில் ஆதரவற்ற சிறுவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த இல்லத்திற்கு பல்வேறு காரணமாக சிறுவர்கள் சேர்த்துவிடப்படுவர். அவற்றில், வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக சென்னை சென்ட்ரல் வரக்கூடிய சிறுவர்கள் முறையான பயண சீட்டு இல்லாமல் இருந்தால், அவர்களும் அன்பு இல்லத்தில் அரசால் சேர்க்கப்படுவர்.
அந்த வகையில், வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் கடந்த 12-ம் தேதி சேர்க்கப்பட்டனர். ஒரு வாரமாக அன்பு இல்லத்தில் இருந்தவர்கள், இன்று அவர்கள் இருந்த அறையின் மேற்பகுதி ஜன்னல் கம்பியை வளைத்து, அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து டான் போஸ்கோ அன்பு இல்ல நிர்வாகிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தற்போது, சிறுவர்கள் தப்பியோடிய சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டியலின மக்களை அவதூறாக பேசியதாக சீமான் மீது காவல்துறையில் புகார்!