Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பிரபல பாலிவூட் நடிகையின் அண்ணன் போதைப்பொருள் வழக்கில் கைது?!

    பிரபல பாலிவூட் நடிகையின் அண்ணன் போதைப்பொருள் வழக்கில் கைது?!

    போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகனும், பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரருமான சித்தாந்த் கபூர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூர் நட்சத்திர விடுதியில் போதை பொருள் பயன்படுத்தியதாக சித்தாந்த் கபூர் உட்பட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

    நட்சத்திர விடுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு போலீசார் விரைந்தனர். இதையடுத்து அங்கு நடத்திய சோதனையில் நட்சத்திர விடுதியில் நடந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பரிசோதனைக்காக ரத்த மாதிரி எடுக்கப்பட்ட நிலையில் 35 பெயரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும், கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சித்தாந்த் கபூர் உள்ளிட்ட 5 பேரையும் ஜாமினில் போலீசார் விடுவித்தனர்.

    இதுகுறித்து பெங்களூரு டிசிபி பீமா சங்கர் குல்லேட் கூறுகையில்: குற்றம்சாட்டப்பட்ட சித்தாந்த் கபூர் மற்றும் நான்கு பேரும் விசாரணைக்காக போலீசார் அழைக்கும் நாளில் நேரில் ஆஜராக வேண்டும். அவர்களை கைது செய்வது தொடர்பா நடைமுறைகள் பின்பற்றப்படும். தற்போது 5 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனையில் சித்தாந்த் கபூர் உள்ளிட்ட 5 பேரும் போதைப்பொருள் உட்கொண்டது உறுதியானதால், அவர்களுக்கு அந்த போதைப் பொருள் எங்கிருந்து கிடைத்தது குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

    கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் நடிகர்கள் கலந்து கொள்ளும் விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் மீது குற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

    ஆட்டு எருவில் இவ்வளவு சத்துக்களா? விவசாயிகளே தவற விடாதீர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....