Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அதிர்ச்சி கலந்த கவலையில் பீஸ்ட் திரைப்படக்குழுவும், விஜய் இரசிகர்களும்! காரணம் இதுதான்!

    அதிர்ச்சி கலந்த கவலையில் பீஸ்ட் திரைப்படக்குழுவும், விஜய் இரசிகர்களும்! காரணம் இதுதான்!

    நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் இந்தியா முழுவதும் பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்ககூடிய திரைப்படம்தான், பீஸ்ட்! தளபதி 65 என்று இப்படத்திற்கு முதன்முதலாக பெயர் சூட்டிய சமயத்தில் இருந்தே இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு என்பது உச்சத்தில்தான் உள்ளது. பீஸ்ட் எதிர்ப்பார்ப்பில் உச்சத்தைதான் அடித்தளமாகவே கொண்டுள்ளது. ஆதலால் பீஸ்ட் பற்றிய அப்டேட்டுகள் வரும்போதெல்லாம் அதிகரிக்கும் எதிர்ப்பார்ப்பு என்பது உச்சத்தின் உச்சமாகத்தான் இருந்து வருகிறது.Vijay Beast Promo

    ஒவ்வொரு முறை பீஸ்ட் திரைப்படம் குறித்த செய்திகள் வெளிவரும்போதும் தளபதி விஜய் அவர்களின் இரசிகர்கள் அடையும் உற்சாகத்திற்கு அளவு என்பதே இல்லை. இதுவரை வெளிவந்த பீஸ்ட் பற்றிய செய்திகள் இரசிகர்களை ஆர்ப்பரிக்க மட்டுமே செய்த நிலையில், முதல்முறையாக பீஸ்ட் பற்றிய செய்தியோன்று தளபதி விஜய் இரசிகர்களை கவலையுறச் செய்துள்ளது.

    ஆம்! பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற தளபதி விஜய் அவர்களின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் லீக் ஆகியிருக்கிறது. இது விஜய் இரசிகர்களை கவலையுறச் செய்துள்ளது. விஐய் அவர்களின் திரைப்படத்திற்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்றும், யார் இந்த வேலையைச் செய்திருப்பார்கள் எனவும் பல கேள்விகளும், உரையாடங்களும் விஜய் இரசிகர்கள் மத்தியில் பரவிக்கொண்டிருக்கிறது.

    மேலும், பீஸ்ட் திரைப்படத்தில் இருந்து லீக்கான விஜய் அவர்களின் புகைப்படத்தை பகிர வேண்டாம் என்றும் விஜய் இரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். அதையும் மீறி லீக்கான புகைப்படத்தை பகிரும் சமூக வலைத்தள கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன.

    beast

    இரசிகர்களின் கவலை ஒருப்பக்கம் என்றால், இந்நிகழ்வு குறித்து பீஸ்ட் திரைப்படக்குழு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. மேலும். யார் அந்த புகைப்படத்தை வெளியிட்டது என்று விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வந்துக்கொண்டிருக்கின்றன.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....