கோவையில் பேருந்தில் உள்ள படத்தை பார்த்து துரத்தி சென்ற குதிரையின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
கோவையில் பேருந்தின் பக்கவாட்டில் ஒட்டப்பட்டிருக்கும் குதிரை ஸ்டிக்கரைப் பார்த்த குட்டி குதிரை ஒன்று நீண்ட தூரம் அந்தப்பேருந்தின் பின்னாடியே ஓடிச் செல்லும் காணொளி வெளியாகியுள்ளது.
கோவை அருகே பேரூர் பட்டீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள தர்ப்பண மண்டபம் மற்றும் படித்துறை பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றித் திரிவது வழக்கம்.
அப்படி ஒரு குதிரையின் தாய், அதைப் பிரிந்து வேறொரு இடத்துக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் , தாயை காணாமல் குதிரை குட்டி தவித்து வந்ததுள்ளது. இந்நிலையில் , பேருந்தில் ஒட்டப்பட்டிருக்கும் குதிரை ஸ்டிக்கரை தனது தாய் என நினைத்த அந்தக் குட்டி குதிரை, பேருந்து செல்ல செல்ல அதை துரத்திக் கொண்டே ஓடிச் செல்கிறது.
இந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ‘தாய் பாசம் உயிர்ப்பாசம்’ என நெட்டிசன்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தில் குதிரை ஒவியத்தை பார்த்தவுடன் பீலிங் ஆன குட்டிக் குதிரை. #kovai pic.twitter.com/Ck8ja3a641
— கார்த்திக் சதிஸ்குமார் (@kovaikarthee) September 12, 2022
இதையும் படிங்க: பொரியலில் எலி தலை விவகாரம்! உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை..