பரந்து விரிந்து இருக்கும் நமது விண்வெளியில் ஏற்படும் நிகழ்வுகள், மற்றும் மாற்றங்கள் இன்றும் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளன. விண்வெளியில் ஏற்படும் இத்தகைய நிகழ்வுகளை கண்டறிய உலக நாடுகளின் அரசாங்கங்களும், தனியார் ஆய்வகங்களும் ஆய்வு செய்து வருகின்றன. பூமியில் மாற்றங்கள் ஏற்படுவது போல், விண்வெளியிலும் மாற்றங்களும் அதிசயங்களும் நடந்து கொண்டே இருக்கின்றன.
துருவ பகுதிகளுக்கே உரிய அரோரா(aurora) எனப்படும் துருவ வெளிச்சங்கள் (polar lights) தற்போது மத்திய பகுதிகளிலும் தெரிய ஆரம்பித்துவிட்டன. சூரியனில் இருந்து வரும் வெப்ப அலைகள் மற்றும் புயல் காற்றுகள் புவியின் வளிமண்டலத்தினை கடக்கும் பொழுது புவியின் காந்த அலைகளோடு சேர்ந்து துருவ வெளிச்சங்களை தோற்றுவிக்கும். இது பச்சை மற்றும் நீல நிற ஒளிகற்றைகளாக காணப்படும்.
மத்திய நாடுகளிலும் துருவ வெளிச்சங்கள் தோன்றி வருவதற்கு சான்றாக சில மாதங்களுக்கு முன்னர் டெக்சாஸ் இளைஞர் ஒருவர் பசிபிக் பெருங்கடலில் விமானம் ஓட்டும் போது இரவில் பச்சை நிற ஒளியை கண்டுள்ளார், அதை வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் மிசோரி மாநிலத்தை சேர்ந்த மக்கள் கடந்த மே மாதம் 16ம் தேதி அன்று இரவு வானத்தில் ஒரு பிரகாசமான ஒளிப் பந்தைப் பலர் பார்த்துள்ளனர். அந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் வானில் ஒரு மணி நேரம் நகர்ந்த வண்ணம் தெரிந்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு பின் திசை மாறி சென்றுள்ளது. அதை பார்த்த மக்கள், அது என்னவென்று கணிக்க முடியவில்லை என்று தங்கள் பதிவுகளில் எழுதியுள்ளனர்.
சென்ற வாரம் தென்னாப்பிரிக்காவின் பீட்டர்மரிட்ஸ்பர்க்கில், வானத்தில் நீண்ட பச்சை ஒளியைக் கண்டுள்ளனர். இந்த ஒளி எதனால் தோன்றியது என்பதைப் பற்றி தென் ஆப்ரிக்க மக்கள் சமூக ஊடகங்களில், விண்கல்லின் எரிநிலை ஒளியா, விண்கற்கள் வளிமண்டத்தை ஒட்டிப்போவதால் ஏற்பட்ட ஒளியா, இல்லை ஏலியன் ஊர்திகளா, நம் பூமியை தாக்க வந்த பொருளா என பல யூகங்களையும், கதைகளையும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இன்று வரை அந்தப் பச்சை ஒளி எதனால் தோன்றியது குறித்த ஆய்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் இன்று வரை பதில் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் எழுந்த திடீர் புகார்!