Saturday, April 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஏடிஎம்-களில் தொடர் கொள்ளை; மூன்று நாட்களில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் என ஐஜி நம்பிக்கை!

    ஏடிஎம்-களில் தொடர் கொள்ளை; மூன்று நாட்களில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் என ஐஜி நம்பிக்கை!

    திருவண்ணாமலை ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்த கும்பல் 3 நாட்களில் பிடிபடுவார்கள் என வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன் தெரிவித்துள்ளார். 

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி நள்ளிரவு முதல் 12 ஆம் தேதி அதிகாலைக்குள்ளாக 4 ஏடிஎம் மையங்களில் மர்ம நபர்கள் அங்குள்ள இயந்திரங்களை உடைத்து 75 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர். காவல்துறையினர் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். 

    இதுகுறித்து திருவண்ணாமலை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தேவையான அளவுக்கு தகவல் கிடைத்து இருப்பதாகவும், 9 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தெரிவித்தார். மேலும் பல மாநிலங்களுக்கு சென்று தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

    தொடர்ந்து பேசிய அவர், குறிப்பிட்ட வகையான ஏ.டி.எம் இயந்திரங்களில் மட்டும்தான் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பதாகவும், வெளிமாநிலங்களில் இதுபோன்ற கொள்ளைச் சம்பவம் ஏற்கனவே நடந்து இருப்பதாகவும் கூறினார். 

    இருப்பினும் தமிழ்நாட்டில் இது முதல் முறை என்றும், ஏடிஎம் பற்றிய தொழில்நுட்பம் தெரிந்த நபர்களே கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி இருக்க வேண்டும் என்றும் ஐஜி கண்ணன் தெரிவித்தார். 

    விஷம் குடித்த விவசாயி; கண்டுக்காத காவல் ஆய்வாளர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....