இரும்புத்திரை, சர்தார் போன்ற வெற்றித்திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.மித்ரன், பத்திரிகையாளர் ஆஷாமீரா ஐயப்பனை நேற்று மணந்தார்.
விஷால், அர்ஜுன், சமந்தா நடித்து 2018-ம் ஆண்டு வெளியான ‘இரும்புத்திரை’ படத்தின் மூலம் இயக்குநர் ஆக அறிமுகமானவர், பி.எஸ்.மித்ரன். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில், ‘ஹீரோ’, கார்த்தி நடிப்பில் ‘சர்தார்’ ஆகிய படங்கள் வெளிவந்தன.
கடந்தாண்டு தீபாவளி வெளியிடாக வந்த சர்தார் விமர்சன ரிதீயாகவும், பாக்ஸ் ஆபிஸ் ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. இந்நிலையில், பி.எஸ்.மித்ரனுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
இயக்குநர் பி.எஸ்.மித்ரனும், சினிமா சார்ந்த் பத்திரிகையாளர் ஆஷாமீரா ஐயப்பனும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
இதைத்தொடர்ந்து, பி.எஸ்.மித்ரன் மற்றும் ஆஷாமீரா ஐயப்பன் ஆகியோரின் திருமணம் தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டையில் உள்ள கலியக் கூத்த ஐயனார் கோயிலில் நேற்று காலை நடைபெற்றுள்ளது.
இத்திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரைத்துறையினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். நடிகர் கார்த்திக்கும் திருமணத்தில் கலந்துகொண்டார்.
தொடர்ந்து இரண்டவாது நாளாக அசாமில் நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்!