டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளைப் பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளார் பிரபல சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்போட்டியானது தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, டேவிட் வார்னரும், உஸ்மான் க்வாஜாவும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதற்கு அடுத்த வந்த மார்னஸ் மற்றும் ஸ்மித் 49, 37 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். இதற்கு பிறகு வந்த மேட் டக் அவுட் ஆக, பீட்டர் மற்றும் அலக்ஸ் கேரி நிதானமாக விளையாடி வந்தனர்.
அப்போது, ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை 36 ரன்களுக்கு போல்ட் செய்து வெளியேற்றினார் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய 450-வது விக்கெட் இதுவாகும். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள், 450 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர், முதல் ஆசிய வீரர் என்கிற புதிய சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கிறது.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000+ ரன்கள், 450+ விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள்
- ஷான் வார்னே (3154 ரன்கள், 708 விக்கெட்டுகள்)
- ஸ்டூவர்ட் பிராட் (3550 ரன்கள், 566 விக்கெட்டுகள்)
- 3.அஸ்வின் (3043 ரன்கள், 450 விக்கெட்டுகள்)
அஜித்குமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு எப்போது? – வெளிவந்த அறிவிப்பு!