Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அஜித்குமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு எப்போது? - வெளிவந்த அறிவிப்பு!

    அஜித்குமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு எப்போது? – வெளிவந்த அறிவிப்பு!

    நடிகர் அஜித்குமாரின் அடுத்த படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளார் என்றும், அப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 

    நடிகர் அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளிவந்த துணிவு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் பெரும் வேட்டையை நிகழ்த்தியது.

    துணிவைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமாரின் 62-வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும், இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘ஏகே-62’ என்றும் பெயரிடப்பட்டது. இதனால், விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தின் பயோவில் ‘ஏகே-62’ என்று அப்டேட் செய்தார். 

    இதைத்தொடர்ந்து, ஏகே-62 திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், இத்திரைப்படத்தில் சந்தானம், அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. 

    ஆனால், திடீரென ஏகே-62 திரைப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதாக சினிமா வட்டாரங்கள் பேசிந்தன. இதைத்தொடர்ந்து, விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தின் பயோவில் ‘ஏகே-62’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததை நீக்கினார். இதன் மூலம், விக்னேஷ் சிவன் ஏகே-62 திரைப்படத்தில் இருந்து விலகியுள்ளது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. 

    இந்நிலையில், அஜித்குமாரின் 62 ஆவது திரைப்படத்தை தடம், கலகத்தலைவன் போன்ற திரைப்படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கவுள்ளார் என்றும், அப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 

    இது தொடர்பாக சினிமா வட்டாரத்தை அனுகிய போது,  அஜித்குமாரின் 62 ஆவது திரைப்படம் குறித்த இன்னும் ஒரு வார காலத்திற்குள் வெளியாகும் என்றும், எதிர்பாராத ஆச்சர்யங்கள் இப்படத்தில் இருக்கபோவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    17 மணி நேரமாக தம்பியுடன் இடிபாடுகளில் சிக்கித் தவித்த சிறுமி ; வைரலான வீடியோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....