கிரிக்கெட் வீரர் அஷ்வினிடம், ‘என்னை காப்பாற்றியதற்கு நன்றி நண்பா’ என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
மெல்போர்னில் நடந்த டி20 உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி கடைசி பந்தில் திரில் வெற்றியை பதிவு செய்தது.
இந்தப் போட்டியின் கடைசி ஓவரில் 2 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது கடைசி நேரத்தில் தினேஷ் கார்திக் ஸ்டம்ப் அவுட் ஆனார். அடுத்து வந்த அஷ்வின் 1 பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது நவாஸ் ‘வைடு’ வீச, கடைசி பந்தில் அஷ்வின் 1 ரன் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
இரண்டாவது போட்டிக்காக தற்போது இந்திய அணியினர் சிட்னி சென்றுள்ளனர். அப்போது தினேஷ் கார்த்திக், அஷ்வினின் தோளைத் தட்டிக் கொடுத்தபடி, ‘பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் என்னை காப்பாற்றியதற்கு நன்றி நண்பா’ என தெரிவித்தார்.
இதுகுறித்த காணொளி இந்திய கிரிக்கெட் போர்டு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Hello Sydney 👋
We are here for our 2⃣nd game of the #T20WorldCup! 👏 👏#TeamIndia pic.twitter.com/96toEZzvqe
— BCCI (@BCCI) October 25, 2022
இதையும் படிங்க: மனைவியை உயிருடன் புதைத்த கொடூரன்! கடவுள் போல் அலர்ட் கொடுத்து காப்பாற்றிய ‘ஆப்பிள் வாட்ச்’