காதலிக்க மறுத்ததால் ஓடும் ரயிலில் தள்ளிவிட்டு சத்யா என்ற மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள் ,மற்றுமொரு நிகழ்வாக சென்னையில் மீண்டும் கல்லூரி மாணவி ஒருவரை வீடு புகுந்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சென்னை பரங்கிமலை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த சத்யா என்ற கல்லூரி மாணவியை ,அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க சதீஷ் என்ற வாலிபர் , காதலிக்க மறுத்ததற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு ரெயில் முன்பு தள்ளி, கொலை செய்த சம்பவம் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது .
இந்த கொடூர நிகழ்வு ஓய்ந்து முடிவதற்குள் ,சென்னை சூளைமேட்டில் மற்றுமொரு கோர சம்பவம் அரங்கேற இருந்தது .
சூளைமேடு பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவரை, அதே பகுதியைச் 28-வயது மதிக்கத்தக்க ரஷீத் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார் .அந்த வாலிபரின் காதலை ,அந்த கல்லூரி மாணவி ஏற்காத நிலையில் ,அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் .
இதையும் படிங்க: எந்த நேரத்திலும் 1லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படலாம்: காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
இதனையடுத்து , நேற்று முன்தினம் அந்த மாணவியும் ,அவரது அம்மாவும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட ரஷீத் ,நேராக வீட்டிற்குள் புகுந்து ,அந்த மாணவியின் அம்மாவிடம் உங்கள் மகளை நான் காதலிக்கிறேன். ஆனால் உங்கள் மகள் என்னுடைய காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அவள் இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை. எனக்கு அவளை திருமணம் செய்து தரவேண்டும், என்று கூறி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
உடனே அந்த மாணவியின் அம்மாவும் ரஷீத்தை வெளியில் போகும்படி பதிலுக்கு கத்தி கூச்சலிட்டதோடு, என் மகளை உனக்கு திருமணம் செய்துவைக்க விருப்பம் இல்லை என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரஷித் உடனே அவர்கள் இருவரையும் தாக்க முற்பட்டதோடு ,அந்த மாணவியையும் கொலை செய்ய முயற்சித்துள்ளார் .
இந்த நிலையில் தாய் ,மகள் இருவரும் அருகில் இருப்பவர்களுக்கு கேட்கும் படி கூச்சலிட்டு கத்தவே ,பயந்து போன ரஷித் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் .ரஷீத் தப்பி ஓடுவதற்கு முன்பாக ,அந்த மாணவியிடம் என்னைக்கு இருந்தாலும், நான்தான் உன் கழுத்தில் தாலி கட்டுவேன், இல்லாவிட்டால், கொலை செய்யவும் தயங்க மாட்டேன் , என்று மிரட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது .
இதனையடுத்து பயந்து போன அந்த மாணவியும் ,அவரது அம்மாவும் உடனடியாக சூளைமேடு காவல்நிலையத்திற்குச் சென்று ,ரஷீத் மீது புகார் அளிக்கவே , போலீசாரும் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து விசாரணையை துரிதப்படுத்திய போலீசார் கல்லூரி மாணவியை சைக்கோ போல மிரட்டி சென்ற ரஷீத்தை பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து , நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தமிழகத்தில் தலை விரித்தாட தொடங்கியுள்ளதோ என்ற கேள்வியையும் , அச்சத்தையும் பொது மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது . அதுமட்டுமின்றி மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி மிக அருமையாக நடைபெற்று வருவதாக நெட்டிசன்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரக்கத்தனமான காதல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- பா.ம.க. நிறுவனர் வலியுறுத்தல்