ரஷ்யாவில் இனி ஃபார்முலா – 1 கார் பந்தயம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் சாச்சி நகரில் இந்தாண்டு ஃபார்முலா – 1 கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம் நடைபெற இருந்த நிலையில் உக்ரைன் போர் காரணமாக, அப்போட்டியை ரஷ்ய அரசு ரத்து செய்தது.
இதனால், உடனடியாக வேறு நாட்டிற்கு இந்த பந்தயத்தை மாற்றும் சூழல் ஏற்பட்டதால், இனி வரும் காலங்களில் ஃபார்முலா – 1 கார் பந்தயங்கள் ரஷ்யாவில் நடைபெறாது என ஃபார்முலா-1 அமைப்பின் தலைமைச் செயலர் ஸ்டெஃபனோ டாமினிகலி தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக ரஷ்யாவிடம் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்போவது இல்லை என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக, இந்தாண்டு ரஷ்யாவில் நடைபெற இருந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி உக்ரைன் போர் காரணமாக சென்னையில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பண்டைக்கால தண்டனைகள்: ரத்தமின்றி ஒரு சித்திரவதை