Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிமுக பிளவுபட்டிருப்பது குழந்தைகளுக்கே தெரியும்- பாமக பாலு தாக்கு

    அதிமுக பிளவுபட்டிருப்பது குழந்தைகளுக்கே தெரியும்- பாமக பாலு தாக்கு

    அதிமுக பிளவுபட்டிருப்பது குறித்து குழந்தைகளுக்கே தெரியும் என பாமக நிர்வாகியும் வழக்கறிஞருமான பாலு தெரிவித்துள்ளார். 

    சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பாமக வழக்கறிஞ்சர் பாலு செய்தியாளர் சந்திப்பில் பேசினார். 

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பொதுமக்களிடம் திமுக எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்தும், அதிமுக பிளவுபட்டிருப்பது குறித்தும் பாமகவின் திட்டங்கள் குறித்தும் விளக்கிக்கொண்டிருந்தாக தெரிவித்த பாலு, அதிமுக பிளவுபட்டிருப்பது குறித்து குழந்தைகளுக்கு கூட தெரியும் என கூறினார். 

    ஜெயக்குமார் இதற்கென தன்னை தயாரித்து வந்தது போல், 1988-ல் தாங்கள் தான் பாமகவுக்கு கொடுத்ததாகவும், அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற உறுப்பினரானதற்கு நாங்கள் தான் காரணம் என்றும் கூறியிருப்பதாக தெரிவித்தார். 

    அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதற்கு, இவர் எப்படி காரணம்? என கேள்வி எழுப்பிய வழக்கறிஞர் பாலு, உடன்படிக்கையின்படி நாடாளுமன்றத்திற்கான இடம் பாமகவுக்கு வழங்கப்படுவதாகவும், பாமகவில் யாருக்கு இடம் கொடுப்பது என்பது பாமாக முடிவுசெய்து, பொதுக்குழு நடத்தி அன்புமணி ராமதாசுக்கு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

    1996 ஐ ஜெயக்குமார் சற்று திரும்பிப்பார்க்க வேண்டும் எனவும், 1996 தேர்தலில் அதிமுக பெற்ற எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 4. பாமக தனித்து நின்று பெற்ற எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 4 என்றும் கூறினார். 

    தொடர்ந்து பேசிய பாலு, அதிமுக பலவீனமடைந்தபோது, மறைந்த ஜெயலலிதா அவர்கள் எங்களிடம் கூட்டணி வைத்தபோது தான் அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதாகவும் தெரிவித்தார். 

    அதிமுக பலவீனமடையும் நேரங்களில் பாமக உயிர் கொடுத்தது. அதேபோல், 2001 ஆம் ஆண்டு தேர்தலின் போது எங்களிடம் கூட்டணி வைப்பதற்காக ஜெயலலிதா அவர்கள் வழி மேல் விழி வைத்து காத்திருந்தார். 

    நாங்கள் எப்போதும் எங்களால் தான் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தார் என்றும், எங்களால் தான் எடப்பாடி பழனிச்சாமி இரண்டாண்டுகள் முதல் அமைச்சராக இருந்தார் என்றும், ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததற்கு பாமக தான் காரணம் என்றும் நாங்கள் ஒருபோதும் சொன்னதில்லை. ஆனால், ஜெயக்குமார் பாமக மீது விமர்சனங்கள் வைக்கும் போது சற்று கவனமாக வைக்க வேண்டும் என பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்தார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....