அதிமுகவும் திமுகவும் அண்ணன், தம்பி இயக்கம்தான் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது:
அதிமுக கூட்டணி அமைத்தால் சேரத் தயார் என்று டிடிவி தினகரன் கூறிய கருத்தை வரவேற்கிறேன். மேலும், டிடிவி தினகரனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சந்திப்பேன்.
பிரதமர் மோடி வரும் 12ஆம் தேதி தமிழ்நாடு வரும்போது வாய்ப்பு கிடைத்தால் அவரை நான் சந்திப்பேன். அதிமுகவை யாராலும் மிரட்ட முடியாது. அதிமுக தலைமையில் பிரச்னை இருக்கிறது என்ற தோற்றம் உருவாகியுள்ளது. அதிமுகவில் சில சில பிரச்னைகள் வரும், அது சரியாகிவிடும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுகவும், அதிமுகவும் அண்ணன் தம்பி போன்று இருப்பதாகவும், பாஜகதான் இடையில் பிரச்சினையை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘திமுகவும் அதிமுகவும் அண்ணன், தம்பி இயக்கம்தான். ஆனால், நாங்கள் மாறுபட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். எம்ஜிஆர் உருவாக்கிய பாதையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். திமுக அவர்களின் பாதையில் பயணிக்கிறார்கள். அதேசமயம் திமுக, அதிமுகவை பாரதிய ஜனதா பிரிப்பதாக கூறுவதில் நம்பிக்கை இல்லை’ என்று ஓபிஎஸ் பதிலளித்தார்.
இதையும் படிங்க: நெருக்கடியான சூழலில் ‘தல’ தோனி எனக்கு அனுப்பிய மெசேஜ்? மனம் திறந்த விராட் கோலி