இந்தியாவில் கேரள மாநிலத்தில் முதல் முறையாக குரங்கம்மை பாதிப்பு உறுதியான நிலையில், அம்மாநிலத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கு கூடுதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை 3,413 பேர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கேரள மாநிலத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கு கூடுதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் ஜூலை 15 அன்று நடைபெற்ற உயர் நிலை ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், 5 மாவட்டங்களில் குரங்கம்மை நோய் பரவலை தடுக்க தொடர்பாக முன் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், அவர் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம் திட்டா, ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் குரங்கம்மை பாதிக்கப்பட்டுள்ள நபருடன் ஒரே விமானத்தில் வந்துள்ளார்கள் என்பதால், இந்த கூடுதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவுக்குள் நுழைந்தது குரங்கம்மை நோய்