Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மக்கள் இயக்கத்திற்கு விஜய் கண்டிப்புடன் கூறிய அறிவுரை - தகவல்கள் உள்ளே!

    மக்கள் இயக்கத்திற்கு விஜய் கண்டிப்புடன் கூறிய அறிவுரை – தகவல்கள் உள்ளே!

    தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக பார்க்கப்படும் தளபதி விஜய் அவர்கள் நேரடி அரசியலில் ஈடுபடுவது குறித்து பல காலமாகவே பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக, விஜய் அவர்கள் மாற்றியபோதே தனது அரசியல் பிரவேசத்தை அவர் ஆரம்பிக்கிறார் என்ற கணிப்புகள் வைக்கப்பட்டது.

    விஜய் மக்கள் இயக்கம் 

    அதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கமானது,  2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக விஜய் மக்கள் இயக்கம் வெளிப்படையாக அறிவித்தது. அந்த தேர்தலில் அதிமுக பெரும்பாண்மையான இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சியமைத்தது.

    அதன்பின்பு, விஜய் மக்கள் இயக்கம் நேரடியாக எந்த அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபடாமல் வந்தது. ஆனாலும் விஜய் அவர்களின் திரைப்படங்களைச் சுற்றி தொடர்ச்சியாக அரசியல் நிகழ்த்தப்பட்டன. விஜய் அவர்களின் செயல்பாடுகளும் மறைமுக அரசியலை நோக்கியிருப்பதாகவே கருதப்பட்டது.

    ஊரக உள்ளாட்சித் தேர்தல் 

    இப்படியாக சூழல்கள் நிலவ 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டது. பல இடங்களில் சுயேட்சையாகவும், சில இடங்களில் ஆதரவளித்தும் போட்டியிட்டது. மேலும் இந்த தேர்தலில் விஜயின் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் 169 பேர் போட்டியிட அதில் 129 பேர் வெற்றிப் பெற்றதாக செய்திகள் வெளியானது.

    விஐய் மக்கள் இயக்கத்தின் இந்த வெற்றியானது அரசியல் சூழல்களில் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. பல காலமாக நேரடி அரசியலில் இருக்கும் சில கட்சிகள் ஒரு வெற்றியைக்கூட ருசிக்காத நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றி பலரையும் பிரம்மிக்க வைத்தது.

    சொல்லப்போனால், இந்த வெற்றி விஐய் மக்கள் இயக்கத்திற்கே புதிய நம்பிக்கையைக் கொடுத்தது. இத்தேர்தலில் வெற்றிப் பெற்றவர்களுடன் விஜய் அவர்கள் புகைப்படம் எடுத்ததும், மக்களுக்கு திறம்பட சேவையாற்றுங்கள் என்று அறிவுரை வழங்கியதும் அச்சமயத்தில் வைரலானது. 

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

    ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியை ருசித்த மக்கள் இயக்கம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றியை ருசிக்க தயாரானது. அதன்படியே குறைந்த இடங்களில் போட்டியிட்டாலும், இத்தேர்தலில் முதன்முறையாக விஜய் அவர்களின் மக்கள் இயக்கம் சுயேட்சையாக களம் கண்டது. 

    முழுக்க முழுக்க சுயேட்சையாக தேர்தலில் களம் கண்ட விஜய் அவர்களின் மக்கள் இயக்கம் வெற்றியைப்பெற்றது. நான்கிற்கும் அதிகமான வார்டுகளில் மக்கள் இயக்கம் வெற்றிப்பெற்றது. இதனால் மீண்டும் விஐய் மக்கள் இயக்கம் அரசியல் சூழலில் அதிகம் பேசப்பட்டது. 

    விஐய் மக்கள் இயக்கத்தின் இந்த வெற்றி பல அரசியல் கட்சிகளுக்கு வியப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் விஜய் அவர்களுக்கும் விஜய் மக்கள் இயக்கத்தை இன்னும் விரிவுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை அதிகப்படுத்தியுள்ளது.

    அதன்காரணமாகவே, கடந்த சில மாதங்களாக பல்வேறு அறிவிப்புகளும் அறிவுரைகளும் விஜய் அவர்களிடம் இருந்து விஜய் மக்கள் இயக்கத்திற்கு வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    அறிக்கை 

    அதன்வழியில் இன்றும் ஒரு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, “அரசு பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சி தலைவர்களை மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில், பத்திரிகைகளில், இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும், இயக்கத்தினர் வெளியிடக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், தளபதி விஜய் அவர்களின், கடுமையான உத்தரவின் பேரில், ஏற்கனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம் என்றும், அதனை மீறுவோர் மீது, நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு, இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம் என்றும் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். 

    நம் தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலை, மீண்டும் யாரேனும் மீறினால், இனி அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில், இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறேன் என்றும் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்டுள்ளார். 

    நேற்று தளபதி 66 படபூஜை விழா நடைபெற அதற்கு பிறகு, விஐய் அவர்களும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் எதிர்பரா விதமாக மற்றொரு விழாவில் சந்தித்து பேசியுள்ளனர். இதுவரை வந்துள்ள செய்தியின்படி இயல்பானவற்றையே பேசியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....