Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஏழை எளிய மக்களை வஞ்சிக்கும் விடியா அரசு! ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி...

    ஏழை எளிய மக்களை வஞ்சிக்கும் விடியா அரசு! ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    சென்னை: ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு, ஏழை எளிய மக்களை வஞ்சிக்கும் விடியா அரசு என திமுகவிற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக இன்று அவர், வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

    ஆவின் நெய் விலையை ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த விடியா அரசிற்கு  எனது கடுமையான கண்டனங்கள்; கடந்த மார்ச் மாதம் ரூ.515-க்கு கிடைத்த ஆவின் நெய் தற்போது ரூ.115 உயர்த்தப்பட்டு ரூ.630-க்கு விற்கப்படுகிறது.

    எளியோர் மற்றும் நடுத்தர வர்கத்தினருக்கு ஆவின் பொருட்களை எட்டாகனியாக்கி இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற நிலைக்கு தள்ளியுள்ளது இந்த விடியா அரசு. இன்று வெண்ணை விலையையும் கிலோவிற்கு ௹ 20 உயர்த்தியுள்ளனர்,

    எளிய மக்கள் தங்களுக்கு தேவையான குறைந்தபட்ச ஊட்டச்சத்தை பால் மற்றும் பால் பொருட்கள் மூலம்தான் பெற்று வருகின்றனர். தற்போது அதுகூட அவர்களுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா? 

    இவ்வாறு, எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    உண்மையான விடுதலை இதுவரை நமக்கு கிடைக்கவில்லை! முதலமைச்சர் ரங்கசாமி ஆதங்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....