ராகுல் காந்தியைப் போன்றே அவரது உருவம் கொண்ட கட்சித் தொண்டரின் காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் பல ஊர்களை கடந்து உத்தர பிரதேசத்தில் யாத்திரை நுழைந்துள்ளது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், தில்லி என அணைத்து தரப்பு மக்களையும் ராகுல் காந்தி சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று உத்தர பிரதேச மாநிலம், மாவிகலா பகுதியில் இருந்து பராத் என்ற பகுதிக்கு சென்றது. பாக்தத் என்ற பகுதியை கடந்தபோது இந்த நடைபயணத்தில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார்.
இதனையே ராகுல் காந்தியின் உருவம் கொண்ட கட்சித் தொண்டர் ஒருவரும் இந்த நடைப்பயணத்தில் பங்கேற்றார். இது தொடர்பான காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்; 100 பேருக்கு தூக்கு தண்டனையா?