Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்கூட்டுறவு வார விழாவையொட்டி ஒளிவு மறைவு இல்லாத சிறந்த நிர்வாகம் நடைபெற பயிற்சி முகாம்...

    கூட்டுறவு வார விழாவையொட்டி ஒளிவு மறைவு இல்லாத சிறந்த நிர்வாகம் நடைபெற பயிற்சி முகாம்…

    புதுச்சேரி அரசு கூட்டுறவுத்துறை மற்றும் இந்திய தேசியக் கூட்டுறவு ஒன்றியம் சார்பில் கூட்டுறவு வார விழாவையொட்டி நடைபெற்ற 3-வது நாள் பயிற்சி முகாமில் 4 பிராந்தியங்களை சேர்ந்த கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி அரசு கூட்டுறவுத்துறை மற்றும் இந்திய தேசியக் கூட்டுறவு ஒன்றியம், புதுதில்லி வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவு வார விழாவானது நவம்பர் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியா 75 கூட்டுறவுகளின் வளர்ச்சியும் அவற்றின் எதிர்காலமும் என்ற தலைப்பில் புதுச்சேரியில் கூட்டுறவு வார விழா சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக கூட்டுறவுச்சங்கங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. 3-வது நாளான இன்று நடைபெற்ற முகாமில் கூட்டுறவுகளுக்கான எளிதான வணிகம் அரசு மின் சந்தை மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளின் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் கலந்துகொண்டனர். முகாமிற்கு பேராசிரியர் ரங்கநாதன் அனைவரையும் வரவேற்றார்.

    புதுச்சேரி மாநில கூட்டறவு ஒன்றியத்தின் மேலாண் இயக்குநர் கருணாகரன் வாழ்த்துரை வழங்கினார். ஒன்றியத்தின் நிர்வாகி சாரங்கபாணி பயிற்சியினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பொதுப்பணித்துறை ஓய்வு பண்டக கண்காணிப்பாளர் குணசேகரன், பொது சுகாதாரத்துறை பண்டககாப்பாளர் திருவேங்கடம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    இதில் சுமார் 75 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த பயிற்சியில் அரசு அலுவலகங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் ஒளிவு மறைவு இல்லாத சிறந்த நிர்வாகம் நடைபெற வேண்டும் என்ற நோக்கில் எளிமையான முறையில் வணிகத்தை சந்தைபடுத்துதல், கொள்முதல் செய்தல், அரசு மின் சந்தை மூலமாக எவ்வாறு செய்வது என்பது குறித்து விளக்கப்பட்டது.

    இதையும் படிங்க: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு; கேரள பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....