புயல் காற்றால் சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய தெரு நாயை மின்துறை ஊழியர்கள் மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி மாநிலம் முழுதும் நேற்று காற்றுடன் அவ்வப்போது கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் முதலியார்பேட்டை பட்டமால் நகர் நேற்று வீசிய பலத்த காற்று காரணமாக அப்பகுதியில் இருந்த மின்கம்பி ஒன்று சாலையில் அறுந்து விழுந்தது.
இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியில் அந்த வழியாகச் சென்ற தெருநாய் ஒன்று சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடியது. இது குறித்து அப்பகுதி மக்கள் மின்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்துறை ஊழியர்கள் மின் இணைப்பு துண்டித்து உயிருக்கு போராடிய நாயை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கனமழையால் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த கொடிய விஷமுள்ள பாம்பு! திக்திக் நிமிடங்கள்