உத்தர பிரதேசத்தில் 7 மாத குழந்தையை தெருநாய் கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் இடையே தில்லி அமைந்துள்ள நகரம் நொய்டா. இந்நகரில் செக்டார் 100 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று கட்டிடவேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அங்கு கட்டிட தொழிலாளிகளான தம்பதி தங்களின் 7 மாத கைக்குழந்தையுடன் வேலைக்கு சென்றனர். தம்பதி தங்கள் குழந்தையை கட்டிட பணிகள் நடைபெறும் பகுதிக்கு அருகே வைத்துவிட்டு கட்டிட வேலை செய்து வந்தனர்.
அப்போது, திடீரென அந்த குடியிருப்பு பகுதிக்குள் வந்த தெருநாய், தனியாக இருந்த அந்த 7 மாத கைக்குழந்தையை கடித்தது. தெருநாய் கடித்து குதறியதில் பச்சிளம் குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட உடனே, கட்டிட தொழிலாளிகளான பெற்றோர், சென்று பார்த்தனர். அப்போது, குழந்தையை தெருநாய் கடித்து குதறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பிறகு, தெருநாயிடமிருந்து குழந்தையை மீட்ட பெற்றோர், குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், தெருநாய்கடியால் பலத்த காயமடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 மாத பச்சிளம் குழந்தையை தெருநாய் கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை கிடைக்காமல் செய்தாரா சசிகலா? – வெளிவந்த திடுக்கிடும் தகவல்