Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்துருக்கி நிலநடுக்கம்; சிறுமியை மீட்க உதவிய ரோமியோ - ஜூலியட்!

    துருக்கி நிலநடுக்கம்; சிறுமியை மீட்க உதவிய ரோமியோ – ஜூலியட்!

    துருக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 6 வயது சிறுமியை உரிய நேரத்தில் காப்பாற்ற உதவிய ரோமியோ- ஜூலியட் மோப்ப நாய்களுக்கு பாரட்டுகள் குவிந்து வருகின்றன. 

    துருக்கியில் நேர்ந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுவரையில், 21,000-த்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், பலி எண்ணிக்கை 25,000-த்தை தாண்டுமென கணிக்கப்பட்டுள்ளது. 

    கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மீட்பு பணியானது இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மீட்பு பணிகளின் போது, இடிபாடுகளில் சிக்கியவர்கள் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்பதை கண்டறிவதில் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

    அந்த வகையில், மீட்புப் பணிக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் சென்றிருக்கும் நாய்களில் இருவர்தான், ரோமியோ – ஜூலியட் மோப்ப நாய்கள். இந்த நாய்கள் இடிபாடுகளுக்கு இடையே உயிரோடு சிக்கித் தவித்த சிறுமியை உரிய நேரத்தில் மீட்க உதவியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுமி உயிருடன் இருப்பதை ரோமியோ – ஜூலியட் மீட்பு பணியினருக்கு தெரியப்படுத்த, உடனடியாக மீட்பு பணியினர் அச்சிறுமியை மீட்டனர். 

    சிறுமியை உரிய நேரத்தில் மீட்க உதவிய ரோமியோ- ஜூலியட் மோப்ப நாய்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாரட்டுகள் தற்போது குவிந்து வருகின்றன. 

    முத்தங்களும் முத்தங்களின் எண்ணிக்கையும் போட்டி போடட்டும் – கிஸ் டே ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....