அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான், நிகோபர் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவுகிறது. இதனால், இன்று தமிழ்நாட்டில் ஓரிரூ இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதையடுத்து வரக்கூடிய 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழை இருக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது
அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான், நிகோபர் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தில் சிக்கிய சிறுவன்; இரு நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம்…