நேற்று தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் முன் அறிவிப்பு இல்லாமல் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
- திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு தொடர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் வந்தவாசி மற்றும் செய்யாறு பகுதிகளிலும் நேற்று மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
- திருச்சி மாவட்டத்தில் பாலக்கரை, உறையூர், ஸ்ரீரங்கம் போன்ற பகுதிகளிலும், அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் நேற்று பகலிரவு நேரங்களிலும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் இரவில் உறங்க முடியாமல் அவதிப்பட்டுள்ளனர்.
- கரூர் மாவட்டத்தில், நகர்ப்புறங்களில் ஒரு மணிநேரத்திற்கு மேலாகவும் கிராமப் புறங்களில் இரண்டு மூன்று மணி நேரத்திற்கு மேலாகவும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
- கடலூர் மாவட்டத்திலும் நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டு இரண்டு மணி நேரங்களில் கழித்து மீண்டும் கொடுக்கப்பட்டது. பண்ருட்டி, விருத்தாச்சலம், நெல்லிக்குப்பம் போன்ற பகுதிகளிலும் நேற்று மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
- தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்பட்டு மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
- கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
- கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் இந்த கோடை வெயிலில் காற்று வாங்குவதற்காக வீட்டிற்கு வெளியில் அமர்ந்தனர்.
- நாகை மாவட்டத்திலும் ஒரு மணிக்கு ஒருமுறை மின்வெட்டப்பட்டதாக மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
- அரியலூர் மாவட்டத்தில் ஜெயம்கொண்டம், செந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் மின்வெட்டப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.
- மதுரை மாவட்டத்திலும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மின்வெட்டப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.
கோடையில் இது போன்ற முன் அறிவிப்பு இல்லாத மின்வெட்டுக்களால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.