திருப்பூரில் அரசுப் பேருந்துகள் மோதியதில் ஓட்டுநர், நடத்துநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருப்பூர் மவாட்டம், தாராபுரம் அருகே ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில் சாலக்கடை பகுதி அருகே இருக்கும் மேம்பாலத்தில் திருப்பூரில் இருந்து போடிநாயக்கனூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்து பழுது அடைந்தது.
இதன் காரணமாக அப்பேருந்தின் ஓட்டுநர் பாலகண்ணன் (46), நடத்துநர் முருகேசன் (58) ஆகிய இருவரும் பேருந்தின் அடிப்பகுதியில் அமர்ந்து பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த சமயத்தில் சத்தியமங்கலத்தில் இருந்து செங்கோட்டை நோக்கி சென்ற அரசுப் பேருந்து நேற்று இரவு 11.50 மணிக்கு மணி அளவில், முன்னால் சென்றுக்கொண்டிருந்த நெடுஞ்சாலைத்துறை ரோந்து வாகனத்தின் மோதியது. பிறகு ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் நின்று இருந்த அரசுப் பேருந்தின் மீதும் மோதியது.
இந்த சம்பவத்தில் அரசுப் பேருந்தின் கீழ் அமர்ந்து பழுது சரிசெய்துக் கொண்டிருந்த ஓட்டுநர் பாலகண்ணன் மற்றும் நடத்துநர் முருகேசன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்தத் தகவல் அறிந்து விரைந்து வந்த மூலனூர் காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து மூலனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகனம் செய்யப்பட்டது, நடிகர் மயில்சாமியின் உடல்