புதுச்சேரி மாநில பள்ளி கல்லூரி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசை கண்டித்து அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் சட்டப்பேரவை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் கல்வியாண்டு முடிகின்ற சூழ்நிலையில் கூட சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை முடிக்காத அரசை கண்டித்தும், மாணவர்களுக்கான ஒரு ரூபாய் பேருந்தை இயக்காத ஆளும் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்தும், சென்டாக் நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரியும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து துறைகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 10 சதவீத இடதுக்கீட்டை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் சட்டப்பேரவை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் புதுச்சேரி மாநில பள்ளி கல்லூரி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.