நடிகை சமந்தா தனது உடல் நிலை குறித்த கேள்விக்கு அழுதபடி பதிலளித்துள்ளார்.
நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பு மயோசைடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர், சில காலமாக பொது நிகழ்ச்சிகளில் வருவதை தவிர்த்து வந்தார்.
சமீபத்தில் சமந்தா டப்பிங் பணியில் ஈடுபட்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். மேலும் ரசிகர்களின் அன்பினால் மட்டுமே இந்த கடினமான காலத்தை கடந்து வந்ததாக சமந்தா தெரிவித்திருந்தார்.
தற்போது சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்பட நிகழ்ச்சி ப்ரோமோஷன் ஒன்றில் பங்கேற்ற அவர், புஷ்பா திரைப்படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் இந்தளவு வரவேற்பை பெரும் என்று எதிர் பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.
அப்போது சமந்தாவின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சமந்தா அழுதபடியே, ‘வாழக்கையில் நல்ல நாள்களும் மோசமான நாள்களும் வரும். என் உயிருக்கு ஆபத்து என பலர் சொல்கிறார்கள்; நான் சாகிற நிலைமையில் இல்லை; 3 மாத காலம் சிகிச்சை எடுத்துக்கொண்டதில் ஓரளவு தேறியிருக்கிறேன். இந்த நோயிலிருந்து போராடி மீண்டு வருவேன். நான் மட்டுமில்லை; பல பேர் பல கடிமான சூழ்நிலைகளுடன் போராடி வருகின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார்.
#SamanthaRuthPrabhu opens up about health issues!!
Get well soon #Samantha ❤️pic.twitter.com/FqsZECqX8E
— Cinema Bandi (@CinemaBandiIN) November 8, 2022
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ நிற்கவில்லை; சூசகமாக தகவலை வெளியிட்ட அதிதி சங்கர்!