விக்னேஷ் சிவன்-நயன்தாரா தங்களது இரட்டைக் குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து சொன்ன காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன் – நயன்தாராவுக்கு சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இதை விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில் அறிவித்தார்.
இவர்களுக்கு குழந்தைகள் பிறந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், இதுபற்றி விசாரிக்க சுகாதாரத் துறை சார்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சற்றும் காரசாரம் குறையாமல் இவர்களது சர்ச்சை இருந்து வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று (திங்கள்கிழமை) தீபாவளிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. திரைப் பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த வரிசையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தங்களது இரட்டைக் குழந்தைகளுடன் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த விடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குழந்தைகள் – பிறந்தவுடன் வெளியிடப்படும் முதல் விடியோ இது என்பதால், சமூக ஊடகங்களில் இது அதிகளவில் பகிரப்பட்டு தற்போது வைரலாகியுள்ளது.
View this post on Instagram
இதையும் படிங்க:பெண்களும்… மார்பக புற்றுநோயும்… அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை..!!